Published : 26 Nov 2023 06:44 AM
Last Updated : 26 Nov 2023 06:44 AM
சுடர்விட்டு எரியும் விளக்காக இருந் தாலும் அது தொடர்ந்து ஒளிர தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். ஆனால், தான் ஒளிதரும் விளக்கு என நிரூபிப்பதற்கே முத்துலட்சுமி ரெட்டி அந்நாளில் போராட வேண்டியிருந்தது. பள்ளிக்குச் செல்வதையே ஏதோ தகாத செயலில் ஈடுபடுவதுபோல் யார் கண்ணிலும் படாமல் மறைந்து செல்ல இந்தச் சமூகம் சிறுமி முத்துவை நிர்ப்பந்தித்தது. ஊராரின் தூற்றுதலையும் அவப்பேச்சையும் கேட்டுக் கொண்டுதான் அவர் பாடம் கற்றார். எது தன்னைப் பாதிக்க வேண்டும் என்பதில் அந்த வயதிலேயே அவர் உறுதியோடு இருந்தார்.
மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்த முத்துலட்சுமி மேற்படிப்புக்காகப் புதுக்கோட்டையில் இருந்து வெளியேற நினைத்தார். முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமியின் முன்னாள் மாணவர் ஒருவர் மருத்துவப் படிப்பை முடித்திருந்தார். அவரது அறிமுகம் முத்துலட்சுமியின் மனதில் மருத்துவக் கனவை விதைத்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT