Published : 29 Oct 2023 07:51 AM
Last Updated : 29 Oct 2023 07:51 AM
பாதை தெரிகிறபோது பயணம் செய்வது சாத்தியமே. ஆனால், முட்புதர்கள் மண்டிக்கிடந்த பாழ் நிலத்தைச் சீராக்கிப் பாதை சமைத்தவர் சாவித்ரிபாய் புலே. பெண் கல்விக்காகவும் பெண்ணுரிமைகளுக்காகவும் இறுதிவரை போராடிய சாவித்ரிபாய், இந்தியாவின் முதன்மைப் பெண்ணியவாதிகளுள் ஒருவர்.
கைம்பெண்கள் அவர்களது குடும்பங்களால் கைவிடப்பட்ட நிலையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு அதன் காரணமாகக் குழந்தை பெற்றெடுப்பது பெரும் பாவமென்று கருதப்பட்டது. அப்படியொரு சூழலில் சாதியப் படிநிலையில் மேல்தட்டில் இருந்த குடும்பத்தைச் சார்ந்த காசிபாய் என்னும் கைம்பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஜோதிராவ் – சாவித்ரிபாய் தம்பதி அந்தக் குழந்தையை 1874இல் தத்தெடுத்தது பெரும் புரட்சி. கைம்பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தியாவின் முதல் சிசுக்கொலை தடுப்பு இல்லத்தை அமைத்த சாவித்ரிபாய், பின்னாளில் அதை மருத்துவமனையாக மாற்றினார். புலே தம்பதி தத்தெடுத்த யஷ்வந்த் ராவ் என்னும் அந்தக் குழந்தை அந்த மருத்துவமனையிலேயே மருத்துவராகப் பணி யாற்றியது புரட்சியின் நல்விளைவுகளில் ஒன்று.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT