

மகளுக்குப் பல மருந்துகளைச் சிறுவயதிலேயே கொடுக்கவேண்டிய சூழ்நிலை யில் இருப்பதால், நீங்கள் பயப்படலாம். இவற்றைத் தொடர்ந்து பல மாதங்கள் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தால் என்ன ஆகுமோ என்று வருந்தலாம்.
இத்தொற்றுக்கு இப்படிக் கொடுத்துதான் அதைக் குணப் படுத்த வேண்டியுள்ளது. அதனால் கவலைப் பட வேண்டாம். நோயை இப்போதே குணப் படுத்திவிட்டால் எதிர்காலத்தில் எந்தச் சிக்கலும் ஏற்படப் போவதில்லை.
முறையற்ற சிகிச்சையாலும், மருந்துகளைப் பாதியிலேயே நிறுத்துவ தாலும்தான் பிற பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் தொடக்கக் கால காசநோய்த் தொற்றைத்தான் மருத்துவர்கள் ‘பிரைமரி காம்ப்ளெக்ஸ்' என்றழைக்கிறார்கள். பிரைமரி காம்ப்ளெக்ஸில் மூன்று முக்கியக் கூறுகள் உள்ளன.