

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், குழந்தைகளுக்குச் சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோருக்குப் பெரும் சவாலாக உள்ளது. தாய்ப்பாலில் தொடங்கிக் குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறது சித்த மருத்துவம். குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை முழுமையாகத் தாய்ப்பால் கொடுப்பதைச் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தை யின் வயதுக்கேற்பக் கஞ்சி போன்ற உணவு வகையை அறிமுகப்படுத்த வேண்டும். இதில் கேழ்வரகுக் கஞ்சி அல்லது பாசிப்பருப்புக் கஞ்சி போன்றவை உடலுக்கு மிகுந்த சக்தி தரும். இதன்மூலம் குழந்தைக்குத் தேவையான அளவில் கால்சியம் சத்து கிடைக்கிறது.
பழங்கள் - காய்கறிகள்: ஆப்பிள், ஏலக்கி / நேந்திரம், மாதுளை ரசம் போன்றவை ரத்தம் அதிகரிக்க உதவும் எனச் சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கைக் கீரை, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவற்றை உடல் ஆற்றலுக்கும் நரம்புவளர்ச்சிக்கும், கேரட், பீட்ரூட் போன்ற வற்றை ரத்தத்தில் சத்து சேர்வதற்கும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். துவரை/பயறு வகைகளை வெறும் நீரிலோ காய்கறிக் கலவையிலோ சேர்த்துக் கொடுக்கலாம்நாட்டு நெல்லில் இருந்து பெறப் படும் அரிசி, சித்த மருத்துவப் பாரம்பரியத்தில் சிறந்த சத்து உண வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உணவு வகைகள் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சிக்குத் தேவையான நார்ச்சத்து, மற்ற சத்துக்கள், விட்டமின்களை வழங்குகின்றன.