மாதவிடாய் நின்ற பிறகு...

மாதவிடாய் நின்ற பிறகு...
Updated on
3 min read

பெண்கள் பொதுவாக 15-16 வயதில் பூப்படை வார்கள்; சிலருக்கு 12-13 வயதில்கூட இது ஏற்படலாம். மாதவிடாய் வருதல் என்பது எப்படி இயற்கையானதோ, அதேபோல் 45 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதும் இயல்பானது. மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக முடிவடைவது என்பது இயல்பான நிலையாகும். பெண்ணின ஹார்மோன்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைந்து கடைசியில் முற்றுப்புள்ளி வைத்து ‘குட்பை’ சொல்வதே அது. இதை ஆங்கிலத்தில் Menopause என அழைக்கிறோம்.

எப்படி ஏற்படுகிறது? - மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களின் சினைப்பையில் கரு உற்பத்தியாகாது. சிலருக்கு இது 45 வயதுக்கு முன்னரே ஏற்படலாம். சிலருக்கு 50ஐக் கடந்து 55 வயது வரைகூட நீடிக்கலாம். கருப்பையில் இந்த வயதில் ஏற்படும் சில மாற்றங்களாலும் அவற்றின் செயல்பாடு குறைவாலும் ஈஸ்ட் ரோஜன் எனப்படும் பெண்ணின் ஹார்மோன் அளவு குறைந்து கொண்டே செல்கிறது; ஹார்மோன் போதுமானதாக இல்லாத நிலையில், கருத்தரிப்பதற்காக முட்டை களைச் சினைப்பைகளால் உருவாக்க முடியாது. இந்த நிலையில் பெண் களுக்கு ‘மாதவிடாய் நிறுத்தம்' ஏற்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in