சென்னையில் நாளை அறிவியல் பேரணி

சென்னையில் நாளை அறிவியல் பேரணி
Updated on
1 min read

உலகின் பல நகரங்களில் அறிவியலுக்கான பேரணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் செயல்படும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து சென்னையில் அறிவியல் பேரணியை முன்னெடுக்கின்றன.

இந்தப் பேரணி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.00 - 5.00 மணிவரை நடைபெறவிருக்கிறது. ‘அறிவியல் மக்களுக்கே!’, ‘அறிவியல் சமூக மாற்றத்துக்கே!’, ‘மக்களை மையப்படுத்தி அறிவியல் தொழில்நுட்பக் கொள்கைகளை வகுக்க வேண்டும்!’ என்பது உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து இந்தப் பேரணி நடைபெறுகிறது.

இப்பேரணியில் அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவிருக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in