Published : 29 Jul 2023 06:07 AM
Last Updated : 29 Jul 2023 06:07 AM

ப்ரீமியம்
நோய்களுக்கு 'நோ' - 09 |ஆஸ்துமாவை அறிவோம் பாதிப்பைக் குறைப்போம்

ஒவ்வாமை காரணமாக நமது சுவாசப் பாதையில் ஏற்படும் வீக்கத்தினாலோ சுருக்கத்தினாலோ சீரான சுவாசம் தடைப்படுவதே ஆஸ்துமா. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாது. ஆஸ்துமா பாதிப்பு ஒரு முறை ஏற்பட்டால், அது நோயாளியின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். ஆஸ்துமா உயிரிழப்பை ஏற்படுத்தாது என்றாலும், வாழ்க்கைத் தரத்தை வெகுவாகப் பாதிக்கும்; அன்றாட வாழ்க்கையைச் சிரமத்துக்கு உள்ளாக்கும். அடிக்கடி வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும்.

அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய நவீன மருத்துவத் தொழில்நுட்பம் நோய் கண்டறிதலையும், முறையான சிகிச்சையையும் எளிதாக்கி இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களில்70% தாங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமல் அல்லது முறையான சிகிச்சை பெறாமல் வாழ்ந்துவருகின்றனர். தற்போது இந்தியாவில், மூன்று கோடிக்கும் மேலானோர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர்; 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 18 சதவீதத்தினர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x