Published : 17 Jun 2023 07:12 AM
Last Updated : 17 Jun 2023 07:12 AM

ப்ரீமியம்
புகையிலையை ஏன் தவிர்க்க வேண்டும்?

அமெரிக்கக் கண்டத்தில் பொ.ஆ. (கி.பி.) 1492இல் கொலம்பஸ் முதன்முதலில் காலடி வைத்தபோது அங்கிருந்த பழங்குடியினர் அவரை வரவேற்றனர். பழங்கள், உணவு, ஈட்டிகள் உள்ளிட்ட பலவற்றை அவருக்குப் பரிசாகக் கொடுத்தனர். அந்தப் பரிசுப் பொருள்களில் புகையிலைச் செடியின் காய்ந்த இலைகளும் இருந்தன. இன்று நாம் மலர்களைத் தூவித் தலைவர்களை வரவேற்பதுபோல், அன்று அவர்கள் புகையிலயைத் தூவி கொலம்பஸை வரவேற்றுள்ளனர்.

புகையிலைக்குத் தனித்துவமான ஒரு வாசனை உண்டு என்றாலும் அவை உண்ணக்கூடியவை அல்ல என்பதை அவர்களிடமிருந்து கொலம்பஸ் தெரிந்துகொண்டார். பூர்விக அமெரிக்கர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம், மதவழிபாடுகள் சார்ந்த நோக்கங்களுக்காக அவற்றைப் புகைத்து வந்தனர். விரைவிலேயே கொலம்பஸ் தீவிர புகைபிடிப்பவராக மாறினார். அந்தப் பழக்கத்தை அவர் ஸ்பெயினுக்கும் கொண்டுவந்தார். இன்று புகையிலை உலகெங்கும் பெரும் கேடு விளைவிக்கும் ஒரு சுகாதாரப் பிரச்சினையாகத் திகழ்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x