பறவைகளை அறிவோமா?

பறவைகளை அறிவோமா?
Updated on
1 min read

மின்சாரக் கம்பிகளில் உட்கார்ந்திருக்கும் இரட்டைவால் குருவி, ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் சிட்டுக்குருவி, மரத்தில் கூடு கட்டியிருக்கும் காகம், மாடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் புறாவைப் போன்று நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகளை நாம் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம் ரசனையை மேலும் வளர்த்துக்கொள்ளவும் இயற்கையைப் புரிந்துகொள்ளவும் நேச்சர் கன்சர்வேஷன் ஃபவுண்டேஷன் (NCF), Early Bird என்கிற இணையதளத்தை நடத்திவருகிறது.

Early Bird தற்போது இயற்கை, பறவைகள் குறித்த விளையாட்டுகள், செயல்பாடுகள், விளையாட்டு அட்டைகள், கையேடுகள் போன்றவற்றைப் பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்கிவருகிறது. இவற்றின் மூலம் இந்தியப் பறவைகளையும் இயற்கையின் அருமையையும் சிறார்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இருப்பது கூடுதல் சிறப்பு!

நீங்கள் bit.ly/tamilresources என்கிற சுட்டியை அழுத்தி, இணையதளத்துக்குச் செல்லுங்கள். அங்குள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். பறவைகள், இயற்கை குறித்த விளையாட்டு அட்டைகள், கையேடுகள் போன்றவற்றை உங்களுக்கோ பள்ளிக்கோ பெற்றுக்கொள்ளலாம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in