Published : 03 Jan 2024 06:00 AM
Last Updated : 03 Jan 2024 06:00 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் 35: மரம் வளர்த்தால் மழை கிடைக்குமா?

சிறுவயதில் இருந்தே நாம் எல்லாரும், ‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்ற வாசகத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால், மரம் எப்படி மழையைக் கொண்டுவரும்? மழையால் நீர்நிலைகள் உருவாகின்றன. இந்த நீர்நிலைகள் கடலில் சென்று கலக்கின்றன. பின் இந்தக் கடல்நீர் ஆவியாகி மேகமாகிறது. அதிலிருந்து மழை பெய்கிறது. இதுதான் நீர்சுழற்சி. இங்கே மரம் எங்கு வருகிறது? கடல்நீர்தான் ஆவியாகி மழையாக வருகிறது என்றால், மழை பெறுவதற்கு மரம் வளருங்கள் என்று ஏன் சொல்லவேண்டும்?

மேகங்களை உருவாக்குவதில் மரங்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. மரங்கள் நீரூற்றுகள்போலச் செயல்படுகின்றன. நிலத்துக்கு அடியில் இருக்கும் நீரை வேர்களின் மூலம் உறிஞ்சி, தங்களது உடலின் எல்லாப் பாகங்களுக்கும் கொண்டு செல்கின்றன. பிறகு ஒளிச்சேர்க்கை நடைபெறும்போது மரங்களின் இலைகளில் உள்ள துளைகள் திறக்கின்றன. அப்போது மரத்தின் உள்ளே இருக்கும் நீர் வெளியேறுகிறது. இதை நீராவிப்போக்கு என்கிறோம். ஒரு பெரிய மரம் சராசரியாகத் தினமும் சுமார் 500 லிட்டர் நீரை இவ்வாறு வளிமண்டலத்தில் வெளியிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x