Published : 14 Mar 2023 06:26 AM
Last Updated : 14 Mar 2023 06:26 AM

ப்ரீமியம்
வரலாறு முக்கியம் பாஸ்

வரலாற்றில் மறக்க முடியாத அரசியல் தலைவர்கள், திரை ஆளுமைகளின் கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசினால் எப்படி இருக்கும்? பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி, எம்.ஜி.ஆர், மைக்கேல் ஜாக்சன் ஆகியோரது அரிய ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசுவதைத் தனது முழுநேர வேலையாகச் செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த 27 வயதான சுயாதீனக் கலைஞர் ஜெய்ந்த்.

ஜெய்ந்த்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற ஜெய்ந்த், கரோனா ஊரடங்குக் காலத்தில் யூடியூப் பார்த்துச் சில திறன்களை வளர்த்துக்கொண்டார். சேதமடைந்த பழைய ஒளிப்படங்களை மீட்டெடுப்பதிலும், கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களுக்கு வண்ணம் பூசுவதிலும் (Restoration and Colourisation) கவனம் செலுத்தத் தொடங்கியவர் ‘நிறமி’ என்கிற இன்ஸ்டகிராம் பக்கத்தை நிறுவி தனது படைப்புகளை அதில் பதிவேற்றிவருகிறார். இவை சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று நெட்டிசன்களால் அதிகம் பகிரப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x