

‘காத்து மேல..’, ‘ஐ’ போன்று வைரலான சுயாதீன இசைப்பாடல்களைப் பாடியவர் பால் டப்பா. இவரது இயற்பெயர் அனீஷ். ‘மக்காமிஷி’, ‘ஓ மாரா’ எனத் தமிழ் சினிமாவில் இவர் பாடியுள்ள பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட். நடனக் கலைஞர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் எனப் பன்முகமாக இயங்கி வரும் பால் டப்பாவோடு ஒரு சுவாரசியமான உரையாடல். சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? வேலை செய்வதற்கு அமைதியான நிம்மதியான இரவுதான் வசதியாக இருக்கும். அதனால், தினமும் காலை 11 மணிக்கு மேல் எழுவதுதான் வழக்கம்.
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - சரியான நேரம் சாப்பாடும், நடனத்தில் ’ஒர்க்-அவுட்’டும் இருப்பதால் தனியாக எதையும் ‘ஃபாலோ’ செய்வதில்லை. வேலை நேரம் போக, நல்லா ‘ரெஸ்ட்’ எடுக்கணும். அதுல மட்டும் கவனமா இருப்பேன்.