என் வாழ்க்கை மாறிவிட்டது: சூப்பர் சிங்கர் திவாகர் நெகிழ்ச்சி

என் வாழ்க்கை மாறிவிட்டது: சூப்பர் சிங்கர் திவாகர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

விஜய் டி.வியில் ‘சூப்பர் சிங்கர் சீசன் 4’ - ன் இறுதிச்சுற்றில் வெற்றி யாளராக தேர்வானதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் திவாகர். இதில் வெற்றி பெற்றது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “இவ்வளவு நாட்கள் இதற்காகத்தான் காத்திருந் தேன். என்னுடைய கஷ்டம், போரட்டத்தோடு சேர்ந்து எல்லோருடைய ஆதரவும் இணைந் ததால் இந்த

வெற்றி கிடைத்திருக் கிறது. இன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது. என்னிடம் இப்போ சொந்தமாக பரிசாக கிடைத்த ஒரு வீடு இருக்கிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்திருக் கிறீர்கள். உங்க பிரார்தனையும் என் வெற்றிக்கு காரணம். எவ்வளவு நன்றி சொன்னாலும், இந்த நேரத்தில் பத்தாது!’’ என்றார். சூப்பர் சிங்கர் போட்டியின் இரண் டாவது இடத்தை சையத்சுபானும், மூன்றாவது இடத்தை சரத் சந்தோஷும் பிடித் தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in