

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில், ‘காளிதாஸ்’ (1931) படம் வழியே குழப்பத்தோடுதான் பேசத் தொடங்கியது தமிழ் சினிமா. ஆனால், பத்து ஆண்டுகளை நிறைவு செய்யும் முன்னரே சமூகப் புரட்சிக்கான ஒரு கலையாக அது தன்னைத் தகவமைத்துக்கொண்டது. அதற்குக் காரணமாக இருந்தவர்களில், ‘தமிழ் சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படும் கே.சுப்ரமணியம் முக்கியமானவர்.
அவரது இயக்கத்தில் 1939ஆம் ஆண்டு வெளியான ‘தியாக பூமி’ படத்தில் ஒரு நீதிமன்றக் காட்சி: “என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழவேண்டும். அதற்கு இந்த கோர்ட் உத்தரவிட வேண்டும்” என்று கேட்கிறார் கணவன். “என் கணவரோடு என்னால் சேர்ந்து வாழ முடியாது; வேண்டுமானால் அவருக்கு மாதா மாதம் ஜீவனாம்சம் தருகிறேன். எனக்கு வேண்டி யது விவாகரத்து (விடுதலை).