ராஜேஷ் | தன்னையும் மண்ணையும் உணர்ந்த கலைஞன்! - அஞ்சலி

ராஜேஷ் | தன்னையும் மண்ணையும் உணர்ந்த கலைஞன்! - அஞ்சலி

Published on

‘படிப்பு மேல கவனம் இல்லாம மீசை வைக்கிறீயோ..?’ என்று, பதின்ம வயதில் துளிர்க்கும் மகனின் மீசையை மழித்துவிடும் கண்டிப்பான அப்பாவாகச் சேரனின் ‘ஆட்டோ கிராஃப்’ படத்தில் தோன்றிய ராஜேஷை 2கே கிட்ஸ் மறக்கவே மாட்டார்கள். 80களின் குழவிகளுக்கு கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ போதும். அப்படத்தில் வரும் டாக்டர் ஆனந்த். தற்கொலைக்கு முயன்ற தன்னுடைய புது மனைவியைக் காதலனுடன் சேர்த்து வைக்க முயலும் நேர்மையாளர்.

காதலின் காதலர். ‘இப்படியொரு ஜென்டில்மேனா?’ என்று ரசிகைகளை ராஜேஷ் அதிகமாகப் பெற்ற நாள்கள் அவை. அவர்தான் பின்னர் ஆர்.சி. சக்தியின் ‘சிறை’ படத்தில் அந்தோணி என்கிற முரட்டு மனிதனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்! கால வரிசையில் முன் பின்னாக இங்கே குறிப்பிட்டிருந்தாலும் அத்தனையும் 100 நாள்களைத் தாண்டி ஓடிய மெகா வெற்றிகள். ஆனால், ராஜேஷ் திரை வாழ்க்கையைத் தொடங்கியது தோல்வியின் வாசலில் நின்றபடிதான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in