

மின்சாரம் நாடக மேடைக்கு வந்து சேராத 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, அது நாடக மேடைக்குள் நுழைந்த 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமான முதல் இருபதாண்டுகள் வரையில், தமிழ் நாடகத்தில் ஒரு புரட்சிப் பெண்ணாகப் புகழ்பெற்று விளங்கியவர் பாலாமணி.
அவரை அடியொற்றிப் பல பெண்கள் நாடகக் கம்பெனிகளுக்குத் தலைமை வகிக்கத் தொடங்கினர். அப்படிப்பட்டவர், தன் வாழ்வின் கடைசி காலக்கட்டத்தில் வறுமையில் வாடி இறந்தார். அவரது இறுதிச் சடங்கு செய்யத் தேவைப்பட்ட தொகையை, அவரது குழுவில் பணியாற்றிய சி.எஸ்.சாமண்ணா, பலரிடமும் கேட்டுத் திரட்டவேண்டியிருந்தது.