தடைச் சட்டத்துக்கு அடிக்கல்! - கண் விழித்த சினிமா 11

தடைச் சட்டத்துக்கு அடிக்கல்! - கண் விழித்த சினிமா 11
Updated on
3 min read

பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், 90க்கும் அதிகமான நேரடி, தழுவல், மொழிபெயர்ப்பு நாடகங்களை ‘உரைநடை’ வடிவில் எழுதி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பங்கை வகித்தவர் பம்மல் சம்பந்த முதலியார். அதேபோல் தமிழ் சலனப் படக் காலத்திலும் பின்னர் பேசும் படக் காலத்தின் முதல் பத்தாண்டுகளிலும் திரையுடனான அவரது தொடர்பு, அவருடைய நாடகங்கள் திரைக்கு இடம்பெயர்ந்ததன் வழியாக உருவானது.

1932இல் அவருடைய நாடகங்களில் ஒன்றான ‘காலவாரிஷி’ படமானதில் தொடங்கி, ஏவி.மெய்யப்பன் உருவாக்கத்தில் 1948இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘வேதாள உலகம்’ படம் வரை, பம்மலாரின் பங்களிப்பை அடுத்து வரும் அத்தியாயத்தில் விரிவாக மதிப்பிடலாம். அதற்குமுன் தனது கலை வாழ்க்கை அனுபவங்களைப் பல நூல்களாக விரிவாக எழுதி ஆவணப்படுத்திய வகையில் நாடக வரலாற்றுக்கு அரும்பணி செய்திருக் கிறார். அதற்காக அவர் என்றும் போற்றுதலுக்குரியவர் ஆகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in