Published : 09 Apr 2023 05:07 AM
Last Updated : 09 Apr 2023 05:07 AM

ப்ரீமியம்
சித்திரை சிறப்பு | ஊர் கூடி மீன் பிடிக்கலாம்

தமிழர் பண்பாட்டு மரபில் ஆறு பருவ காலங்கள் உண்டு. அவற்றில் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய நான்கு மாதங்கள் கதிரவன் காயும் இளவேனில் காலம். இந்த நான்கு மாதங்களில்தான் கிராமப்புறங்களில் விதவிதமான திருவிழாக்கள் நடக்கின்றன. அவற்றில் சிறுதெய்வ, பெருதெய்வ கோயில் திருவிழாக்கள் முதன்மை பெற்றாலும் தனித்துவமான சமுதாய விழாக்களும் பல நூறு ஆண்டுகளாகப் புகழ்பெற்று விளங்குகின்றன.

பிரி கட்டும் விழா, எருது கட்டுத் திருவிழா, மாம்பழம் உண்ணும் திருவிழா, பணியாரம் சுடும் திருவிழா, புட்டுத் திருவிழா, புரவியெடுப்புத் திருவிழா, வைக்கோல்பிரி திருவிழா, கலப்பை கட்டுத் திருவிழா என்று சுவாரசியம் கூட்டும் பலவித விழாக்களில் பழமையானது மீன்பிடித் திருவிழா. ஒரு காலத்தில் ஆதிக்கச் சாதியினரும் இடைநிலைச் சாதியினரும் மட்டுமே பங்குபெற்று வந்த மீன்பிடித் திருவிழா, தற்போது அனைவரும் ஒன்றாக மீன் பிடித்து மகிழும் சமத்துவத் திருவிழாவாக மாறியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x