Last Updated : 19 Mar, 2023 06:01 AM

 

Published : 19 Mar 2023 06:01 AM
Last Updated : 19 Mar 2023 06:01 AM

ப்ரீமியம்
காடோடி என்ன செய்தது?

ஒரு நாவல் என்ன செய்யும்? அதுவும் காடு குறித்து எழுதப்பட்ட ஒரு நாவல். உலகின் மிகப் பழமையான மழைக்காடுகளில் ஒன்றான போர்னியோ மழைக்காடுகள் அழிக்கப்படுவதைப் பற்றிய நாவல் ‘காடோடி.’ அது வெளிவந்தபோது அலைபேசியில் தொடர்ந்த அழைப்புகளில் ஒருவர் திடீரெனத் தேம்பி அழத்தொடங்கினார். நாவலைப் படித்த அவரால் தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “ஒரு காட்டின் மரணம் எப்படி இருக்குமென்று உணர்த்திவிட்டீர்கள். அதை என்னால் தாங்க முடியவில்லை” என்றார்.

பின்பு அதே வாசகர் புதுச்சேரியிலுள்ள அவருடைய மூன்று மாடி இல்லத்துக்கு அழைத்திருந்தார். வாசலில் ஏகப்பட்ட கார்கள். “சார், இந்த வீட்டுக்கான மரத்தை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து கட்டினேன். இப்போது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. இந்த நாவல் சென்ற ஆண்டே வந்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது. இதை ஈடுசெய்யும் விதமாகச் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எனக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் முழுக்கவும் காடு வளர்க்கப்போகிறேன் என்பதைக் கூறவே உங்களை அழைத்தேன்” என்றார் நெகிழ்ச்சியுடன். ‘காடோடி’ நாவல் ஏற்படுத்திய தாக்கம் அது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x