Published : 12 Mar 2023 06:37 AM
Last Updated : 12 Mar 2023 06:37 AM

ப்ரீமியம்
நுகர்வோர் உரிமை: அமெரிக்க அதிபர் கென்னடிக்கு என்ன தொடர்பு?

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15, உலக நுகர்வோர் உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உலகம் முழுவதும் நுகர்வோரின் உரிமைகளை அங்கீகரித்து அவை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கானது. நுகர்வோர் உரிமைகள் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்று வலியுறுத்துவதற்கும் நுகர்வோர் உரிமைகளை நசுக்கும் முறைகேடுகளையும் சமூக அநீதிகளையும் எதிர்த்துக் குரல் எழுப்புவதற்கும் உலக நுகர்வோர் உரிமைகள் நாள் பயன்படுத்தப்படுகிறது.

1960இல் உலகெங்கும் உள்ள நுகர்வோர் சங்கங்கள் இணைந்து, நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச நிறுவனம் (International Organisation of Consumer Unions) என்னும் அமைப்பு உருவானது. இது நுகர்வோர் அகிலம் (Consumers International) என்று அழைக்கப்படுகிறது. 1962 மார்ச் 15, அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுகர்வோர் உரிமைகள் பற்றி உரையாற்றினார். “நுகர்வோர் என்பதற்கான வரையறைக்குள் நாம் அனைவரும் அடங்கு வோம். அரசும் தனியாரும் மேற்கொள்ளும் ஒவ்வொரு பொருளாதார முடிவாலும் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான். ஆனால், நுகர்வோரின் கருத்துகள் பெரும்பாலும் அரசு, தனியார் அமைப்புகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை” என்று கென்னடி அந்த உரையில் பேசினார். நுகர்வோர் உரிமைகள் குறித்துச் சர்வதேச அளவில் ஒரு அரசுசார் தலைவர் பேசியது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. இந்தியாவில் மகாத்மா காந்தி நுகர்வோர் பற்றி எழுதியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x