

எல்லா சக்திகளுக்கும் இருப்பிடமாகவும், விஷ்ணு, பரமசிவன், பிரம்மா முதலான தேவதைகளால் போற்றப்படுபவளும், பிரபஞ்சத்தின் ஆதாரமாகவும், சக்தியாகவும் விளங்குபவள்தான் அம்பிகை எனும் பராசக்தி. உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் இவளே தாயாக இருக்கிறாள்.
யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரு- ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை! நமஸ்தஸ்யை! நமஸ்தஸ்யை நமோ நம:
தேவிமஹாத்மிய ஸ்லோகத்தின்படி அம்பிகையே எல்லா உயிர்களிடத்திலும் தாயாக விளங்குகிறாள். அம்பிகையை வழிபடும் விரதமே நவராத்திரி என்பதால் தொடர்ந்து 9 நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது நியதி.