

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் திருக்கானூர் (விஷ்ணம்பேட்டை) 56-வது தேவாரத் தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு செம்மேனிநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மணலில் மூடப்பட்டிருந்த கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன் வெளிக் கொண்டு வரப்பட்டது. அம்மனின் விக்கிரகம் சாளக்கிராமத்தால் ஆனது.
இறைவன்: செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
அம்பாள்: சிவயோகநாயகி, சவுந்தரநாயகி
தல வரலாறு: ஜமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். ஒருமுறை, கார்த்தவீர்யார்சுனன் என்ற அரசர்