

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் கோயிலில் உள்ள குப்த கங்கையில் நீராடி, ஈசனை வழிபட்டால் இழந்த பதவி கிட்டும் என்பது ஐதீகம்.
மூலவர்: வாஞ்சிநாதேஸ்வரர்
அம்பாள்: மங்களநாயகி, வாழவந்தநாயகி
உயிர்களை எடுக்கும் பதவி தனக்கு சிவ பெருமானால் கொடுக்கப்பட்டதால் எமதர்மராஜா வருந்தினார். திருவாரூர் தியாகராஜரிடம் தனது மனக்குறையைத் தெரிவித்தார்.
ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடுமாறு அசரீரி கூற, எமதர்மராஜாவும் ஸ்ரீவாஞ்சியம் வந்திருந்து தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த ஈசன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, “வேண்டும் வரம் கேள் '' என்றார்.