

இந்திய நாட்டின் பெரும்பாலான மக்கள் இறை நம்பிக்கை கொண்ட வர்களாகவே உள்ளனர். ‘ஊரானோர் தேவகுலம்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப ஊர்தோறும் கோயில்கள் அமைத்து வழிபடுவது தமிழர் மரபு. தமிழர்கள் குடியேறிய சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் கோயில்கள் எழுப்பி இறை வழிபாடு நடந்து வருகிறது.
சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள், ஆச்சாரிய பெருமக்கள், சமயப் பாடல்களையும் சமயக் கோட்பாடுகளையும் தந்து சமயங்களை வளர்த்தனர். தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதி பக்தி இலக்கியங்களாக அமைந்துள்ளது.