

தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் 8 கிமீ தொலைவிலும், வண்டலூர் ரயில் நிலையத்தில் இருந்து 6 கிமீ தொலைவிலும் உள்ள மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாள் வலது கரத்தில் சங்கும் இடது கையில் சக்கரமும் கொண்டு அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
கிராமங்களில் மணி போன்றதாகவும், வட மொழியில் ரத்தின கிரகம் என்றும் அழைக்கப்படும் மணிமங்கலம், கிராமசிகாமணி என்றும், முதலாம் ராஜராஜன் காலத்தில் அவரது மனைவி உலகமாதேவியின் பெயரால் உலக மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.