ஆனந்த ஜோதி
பிள்ளைப்பேறு அருளும் நல்லூர் சுந்தர வரதராஜர் | பரிகார ஸ்தலங்கள்
முன்னொரு காலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் நல்லூர் தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் விக்கிரகத்தை வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, அவர்களால் விக்கிரகத்தை எடுக்க முடியவில்லை.
அப்போது மகாவிஷ்ணு காட்சியருளி, தான் நல்லூர் தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன் புதிய கோயில் கட்டினர். சுவாமி, காண்போரை வசீகரிக்கும் அழகுடன் அருள்பாலிப்பதால், ‘சுந்தரவரதராஜர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இந்த பெருமாள் குழந்தை வரம் தருபவர் என்பதால், ‘பிள்ளைப் பேறு நாயகன்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
