

திருச்சி ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புனித கற்கள், பக்தர்களை அதிக எண்ணிக்கையில் ஈர்த்துள்ளன. அமைதி, தூய்மை, தனிமனித ஒழுக்கம் போன்றவற்றை போதித்து, அங்கு காணப்படும் புல், செடி, கொடி, மரம் என அனைத்தும் பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் வீற்றிருக்கும் ஹரிஹர புத்திரன், பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார்.
தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள 1,707 புண்ணிய தலங்கள், உலகின் 24 நாடுகளில் 83 முக்கிய தலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித கற்கள் இங்கு தனியாக ஓர் இடத்தில் மேடை அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.