

விருத்தாசலம் நகருக்கு மேற்கே 2 கிமீ தொலைவில் மணவாளநல்லூரில் அமைந்துள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் சுயம்பு வடிவிலான முருகன் மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ‘பிராது’ எனும் வழக்குப் பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்ற நிகழ்வுகள் நடைமுறையில் உள்ளன.
பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் தங்கள் புகார்களை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டு கோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்ப்பிப்பது வழக்கம்.