ஸ்வாமி தேசிகனின் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்‌ஷேப சாற்றுமுறை

ஸ்வாமி தேசிகனின் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்‌ஷேப சாற்றுமுறை
Updated on
1 min read

மோட்சத்துக்கு நேரான காரணம் எம்பெருமானின் அருள் என்றும், அதைப் பெறுவதற்கு முதலில் சேதனம், அசேதனம், ஈச்வரன் என்கிற மூன்று தத்துவங்களை நன்கறிய வேண்டும் என்றும் கூறுகிறார் ஸ்வாமி தேசிகன். இறைவன் குறித்த பகவத் விஷயங்களையும், தத்துவங்களையும் அறிவதற்கு குருநாதர் அவசியம்.

ஒரு ஸதாசார்யனை (குருநாதர்) அடைந்து வேதாந்த காலக்ஷேபம் செய்தால் தான் தத்துவங்களை உள்ள படி அறிந்து கொள்ள முடியும் என்பதை புரிந்து கொண்ட தாதாசாரியர் காலக்‌ஷேப கோஷ்டியினர், அஸ்மத் ஸ்வாமி குமாரரும் ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஸஞ்சிகையின் ஆசிரியரும், திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வருமான திருப்புட்குழி ஆராவமுத தாதாசாரியரை ‘சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்’ என்று போற்றி, அவரிடம் இருந்து தத்துவங்களை கற்றறிந்தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in