விலங்குகள் பூஜித்த கூறைநாடு புனுகீஸ்வரர்

விலங்குகள் பூஜித்த கூறைநாடு புனுகீஸ்வரர்
Updated on
1 min read

விலங்குகள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் பல உண்டு. அந்த வகையில் கூறைநாடு புனுகீஸ்வரர் கோயிலில் எழுந்தருளிய ஈசன், புனுகுப் பூனைக்கு அருள்பாலித்த வரலாறு, பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மயிலாடுதுறைக்கு மேற்கே 2 கிமீ தொலைவில் உள்ள கூறைநாடு வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணை, குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது.

அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் பரவியிருந்தது. ஏற்கெனவே யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து நற்பேறு பெற்றுள்ளதைப் போல தானும் நற்பேறு அடைய வேண்டும் என்று புனுகுப் பூனை நினைத்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in