Last Updated : 07 Jun, 2025 08:56 AM

1  

Published : 07 Jun 2025 08:56 AM
Last Updated : 07 Jun 2025 08:56 AM

பக்ரீத்: வறுமையில் உழலும் சக மனிதனுக்கு உதவுவோம்!

‘தி​யாகத் திரு​நாள்’ என்று அழகு தமிழில் அழைக்​கப்​படும் ‘ஈதுல் அள்​ஹா’ என்ற பெரு​நாளை முஸ்​லிம்​கள் இன்று கடைபிடிக்கின்றனர்.வருடத்​தில் இரண்டு தினங்​களை முஸ்​லிம்​கள் உலகம் முழு​வதும் பெரு​நாளாகக் கடைபிடித்து வரு​கின்​றனர். ஒன்று ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்​புப் பெரு​நாள். மற்​றொன்று ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திரு​நாள்.

இந்​நாளில் வசதி உள்​ளோர் அனை​வரும் ஆடு, மாடு, ஒட்​டகம் ஆகிய கால்​நடைகளில் ஒன்றை இறைவனுக்​காக அறுத்து பலி​யிட்டு அதன் இறைச்​சியை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை சொந்த பயன்​பாட்​டுக்கு எடுத்​துக்​கொண்டு மற்​றொரு பங்கை ஏழைகளுக்​கும், இன்​னொரு பங்கை உறவு​களுக்​கும் பகிர்ந்து அளிக்க வேண்​டும் என்று இஸ்​லாம் கூறுகிறது.

இன்​றைய தினத்​தில் கடைபிடிக்க வேண்​டிய ஒரு முக்​கிய வழி​பாடு இது. இறைதூதர் இப்​ராஹீம் நபி அவர்​களை மனித குலத்​தின் இரண்​டாம் தந்​தை, நாகரி​கத்​தின் நிறு​வனர், இறைதூதர்​களின் தந்தை என்​றெல்​லாம் வரலாறு விதந்​தோதுகிறது. அவர்​கள் ஒரு​நாள் இரவு, தன் சொந்த மகனை அறுத்து பலி​யிடு​வது​போல் கனவு கண்​டார்​கள். மூன்று நாட்​கள் தொடர்ச்​சி​யாக இந்​தக் கனவு அவர்​களுக்​குத் தோன்​றிய​தால் அதோர் இறைக் கட்​டளை என்று புரிந்​து​கொண்ட இப்​ராஹிம் நபி அவர்​கள், தன் மகன் இஸ்​மா​யிலை அறுத்து பலி​யிட அவரின் ஒப்​புதலோடு அழைத்​துச் சென்​றார்​கள்.அப்​போது இறைவன் “இப்​ராஹீமே...! நீர் அந்​தக் கனவை மெய்ப்​படுத்தி விட்​டீர், உமது தியாகத்தை நாம் ஏற்​றோம். இதோ நாம் உமக்கு அருளுகின்ற இந்த ஆட்​டுக்​குட்​டியை அறுத்​துப் பலி​யிடு​வீ​ராக” என்று கூறி​னான்.

அந்த இப்​ராஹிம் நபி​யின் தியாகத்தை நினை​வு​கூர்​வதே இந்த தியாகத் திரு​நாளின் நோக்​கம். ஹிஜ்ரா எனும் இஸ்​லாமிய நாட்​காட்​டி​யின் கடைசி மாத​மான இந்த துல்​ஹஜ் மாதத்​தில் ஹஜ் எனும் புனிதக் கடமையை முஸ்​லிம்​கள் தமது ஆயுளில் ஒரு தடவை​யா​வது நிறைவேற்ற வேண்​டும். புனித ஹஜ் கடமையை நிறைவேற்​று​வதற்​காக உலகமெங்​கும் இருந்து மக்கா​வுக்கு சென்​றிருக்​கும் லட்​சக்​கணக்​கான ஹாஜிகள் என்ற புனிதப் பயணி​கள், இம்​மாதத்​தின் எட்​டாம் நாளில் மக்கா​வுக்கு அரு​கே​யுள்ள மினா எனு​மிடத்​தில் கூடாரத்​தில் தங்​கி​யிருந்து வழி​பாடு​கள் செய்​வர். ஒன்​ப​தாம் நாள் அரஃபா எனு​மிடத்​தில் கூடாரத்​தில் தங்கி பிரார்த்​தனை​களில் ஈடு​படு​வர்.

அன்று இரவு முஸ்​தலிபா எனு​மிடத்​தில் திறந்த வெளி​யில் தங்​கி​யிருப்​பர். பின்​னர் பத்​தாம் நாள் அதி​காலை தொழுகையை முடித்​துக்​கொண்டு அங்​கிருந்து புறப்​பட்டு மீண்​டும் மினா​வின் கூடாரத்​துக்கு திரும்​புவர். பெரு​நாள் தின​மான இந்த பத்​தாவது நாளில் மிக முக்​கிய​மான நான்கு வழி​பாடு​களை ஹாஜிகள் மினா​வில் நிறைவேற்​று​வர். சைத்​தானின் அடை​யாள​மாக அமைந்​துள்ள ஜம்​ராத் என்ற தூணில் கல்​லெறிவது, சிகை மழிப்​பது, இறைவனுக்​காக கால்​நடையொன்​றைப் பலி​யிடு​வது, தொன்​மைப் பள்​ளி​வாசலான கஅபாவை வலம் வரு​வது ஆகியன அந்​நான்கு வழி​பாடு​கள்.

இவற்​றுள் சிகை மழித்​தல் என்​பது முஹம்​மது நபி(ஸல்) அவர்​களின் வழி​முறை. மற்​றவை மூன்​றும் இப்​றாஹீம் நபி​யின் தியாக வரலாற்றை நினை​வூட்​டு​வ​தாகும்.

திருக்​குர்​ஆன் கூறுகிறது: “அவர்​கள் தமக்​குரிய பலன்​களை காண்​ப​தற்​காக​வும் தமக்கு அல்​லாஹ் வழங்​கி​யுள்ள கால்​நடைகள் மீது குறிப்​பிட்ட நாட்​களில் இறைவனது பெயரைக் கூறி அறுப்​ப​தற்​காக​வும் (ஹஜ்ஜுக்கு வரு​வார்​கள்). எனவே அவற்​றி​லிருந்து நீங்​களும் உண்​ணுங்​கள். சிரமப்​படும் ஏழைகளுக்​கும் உண்​ணக் கொடுங்​கள்.”

“பின்​னர் அவர்​கள் தம் அழுக்​கு​களை அகற்​றிக் கொள்​ளட்​டும். தம் நேர்த்​திக் கடன்​களை நிறைவேற்​றட்​டும். தொன்​மை​யான அந்த ஆலயத்தை சுற்​றட்​டும். ஹஜ்ஜின் வழி​பாட்டு முறை இது​வே. யார் அல்​லாஹ்​வின் புனிதங்​களை பேணி நடக்​கிறாரோ அவருக்கு அது இறைவனிடம் சிறந்​த​தாகும். (22: 28,29,30)

மேலும் திருக்​குர்​ஆன் கூறுகிறது: “பலி​யிடு​தல் என்ற வழி​பாட்டை ஒவ்​வொரு சமு​தா​யத்​துக்​கும் நாம் ஏற்​படுத்​தி​யுள்​ளோம். அவர்​களுக்கு அல்​லாஹ் வழங்​கி​யுள்ள கால்​நடைகளை அவனின் பெயர்​கூறி அறுப்​ப​தற்​காக.” (22:34)

எனவே, வரலாற்று மாமனிதர் இப்​றாஹீம் நபி கற்​றுத்​தந்த நாகரி​கத்​தின் வழி நடப்​போம். இறைவனுக்​காக தி​யாகம் செய்​வோம். வறுமை​யில் உழலும் சக மனிதனுக்கு உதவு​வோம். ஈத் மு​பாரக்.

கட்டுரையாளர்: மவ்​லானா அல்​ஹாஜ் கா.​மு. இல்​யாஸ்​ ரியாஜி தலை​மை இமாம்​ - ஈத்​கா மஸ்​ஜித்​,மந்தைவெளி, சென்னை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x