Published : 01 May 2025 07:29 AM
Last Updated : 01 May 2025 07:29 AM
குரு என்பவர் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர். அவர் நம்மைப் பார்க்க வைப்பதில்லை; நம்மை நம்மால் பார்க்க வைக்கிறார். அவர் எந்த வடிவிலும் நம்முடன் இருக்கலாம். குரு என்னும் சொல் சமஸ்கிருதத்தில் கு (இருள்) + ரு (ஒளி) எனும் இரு எழுத்துகளின் கூட்டு.
ஆனால், இந்த இருளும் ஒளியும் என்ன? இருள் என்பது மனிதனின் அடிப்படை அறியாமை - மெய்ப்பொருள் அறியாது தன்னைப் பற்றிய தவறான எண்ணங்கள், பற்றுகள், பயங்கள் ஆகியவையின் கூட்டுக் கலவை. ஒளி என்பது அவற்றை அகற்றும் ஆன்மிக விழிப்பு. குரு என்பவர் இந்த இருட்டைக் கலைப்பதோடு, ஒளியின் வழியைக் காட்டுபவர். இது ஓர் ஆசானின் பணியை விஞ்சியது; இது ஒரு மாற்றத்தின் திறவுகோல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT