Published : 04 Jan 2024 06:18 AM
Last Updated : 04 Jan 2024 06:18 AM

ப்ரீமியம்
நல்லொழுக்க புரட்சியாளர் 12: நிக்காஹ் என்னும் ஒப்பந்தம்

குடும்பம் எனும் அலகு, சமூக அமைப்புக்கு முக்கியமானது எனில் அதில் சமத்துவம் இருக்க வேண்டியது அவசியம். ஒருவர் உரிமையை மற்றொருவர் நிராகரிக்காமல் இருக்க வேண்டும். அவரவர் கடமையைச் சரிவர செய்ய வேண்டும். குடும்பத்தில் பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்போது, மகிழ்வான தலைமுறை உருவாகும். நல்லிணக்கத்தை மனிதர்களிடையே வலியுறுத்தும் அண்ணல் நபி, அதைக் குடும்பத்திலிருந்து தொடங்குகிறார்.

அன்றைய அரேபியாவில் பலவகைத் திருமண முறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மணமகளின் பெற்றோருக்குக் குறிப்பிட்ட தொகையை அளித்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது, குறுகியகாலத் திருமணம் (அல்முத்ஆ), மணப்பெண்ணின் அனுமதியின்றி நடக்கும் கட்டாயத் திருமணம் போன்ற முறைகள் அவற்றுள் சில. திருமணம் எனும் நிகழ்வு இல்லாமலேயே ஒரு பெண்ணுடன் பல ஆண்கள் இணைவதும் இருந்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x