விளைச்சலைப் பெருக்க உதவும் கோடைக்கால பாசன மேலாண்மை

விளைச்சலைப் பெருக்க உதவும் கோடைக்கால பாசன மேலாண்மை
Updated on
2 min read

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும் கோடை காலத்தில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் நீராவி ஆவியாகும் விகித அதிகரிப்பு ஆகியவற்றால் பாசன மேலாண்மை என்பது விவசாயத்தில் மிக முக்கியமான அங்கமாகிறது.

இந்தச் சூழலில், பயிர்களுக்குச் சரியான இடைவெளியில் நீர் வழங்குவது விளைச்சலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அரிய வளமான நீரைச் சிக்கனமாகச் சேமிக்கவும் உதவுகிறது. கோடை காலத்தைப் பொறுத்தவரை மண்ணின் தன்மையைப் பொறுத்தே பாசன இடைவெளியைத் தீர்மானிக்க வேண்டும்.

குறிப்பாக, செம்மண், சரளை மண் மற்றும் மணற்பாங்கான மண்ணில் நீர் விரைவாக உறிஞ்சப்பட்டு விடுவதால் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்வது அவசியமாகிறது. அதேநேரம், களிமண் மற்றும் களர் நிலங்களில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது.

பயிர் வாரியான நீர் மேலாண்மை முறைகள்

நெல் பயிருக்குக் கோடையில் தொடர்ந்து நீர் தேக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வேர் மண்டலம் ஈரமாகும் வகையில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்து நிலத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதே போதுமானது. குறிப்பாக, தூர் வெடிக்கும் நிலை மற்றும் பூக்கும் நிலைகளில் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் கவனிக்க வேண்டும்.

கரும்பு பயிரைப் பொறுத்தவரை, ஆரம்ப வளர்ச்சி நிலையில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறையும், பொதுவான வளர்ச்சி நிலையில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் தரலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in