கரிசல் நிலத்தில் பட்டுப் புரட்சி

கரிசல் நிலத்தில் பட்டுப் புரட்சி
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்குப் பகுதியான கோவில்பட்டி கோட்டம் கரிசல் மண் நிறைந்தது. இங்கு வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பி மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகால பருவநிலை மாற்றத்தால் மழை பொய்ப்பது அல்லது அதிகமாகப் பெய்வது என விவசாயம் பெரும் சவாலாக மாறியுள்ளது.

கடும் சிரமத்துக்கு இடையே மகசூல் எடுத்தாலும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

இந்தத் துயரங்​களுக்கு மாற்றாக, இப்பகுதி மானாவாரி விவசா​யிகள் பட்டுப்பூச்சி வளர்ப்புத் தொழிலைக் கையில் எடுத்​துள்ளனர்.

கோவில்​பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராம விவசா​யிகள் 1980-களிலேயே இத்தொழிலை முதன்​முதலில் தொடங்​கினர். அப்போது சிறிய அளவில் துவங்​கப்பட்ட இந்தத் தொழில், தற்போது 20 பண்ணைகளாக விரிவடைந்துள்ளது.

இதற்காக விவசா​யிகள் தங்கள் நிலங்​களில் சுமார் 500 ஏக்கர் பரப்பள​வில், பட்டுப்பு​ழுவின் முதன்மை உணவான மல்பெரி பயிரைச் சாகுபடி செய்கின்​றனர்.

வளர்ப்பு முறை

இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையங்​களில் (Chawkie Rearing Centre) இருந்து புழுக்களை வாங்கி வரும் விவசா​யிகள், அவற்றை முறையான குளிரூட்​டப்பட்ட பண்ணை​களில் வைத்துப் பராமரிக்​கின்​றனர்.

அறையின் தட்பவெப்ப நிலையைக் கண்காணித்து, மல்பெரி இலைகளை உணவாக அளிப்பது தொழிலா​ளர்​களின் முக்கியப் பணியாகும். புழுக்கள் கொண்டு​வரப்பட்ட முதல் 3 நாட்கள் உணவளித்து, பின் 3 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் உணவளிக்​கின்​றனர்.

சுமார் 15 நாட்களுக்குப் பிறகு புழுக்கள் கூடுகட்டு​வதற்காக ‘வளைகள்’ வைக்கப்​படு​கின்றன. அடுத்த 5 நாட்களில் புழுக்கள் தன் வாய் வழியாக ஜெல்லி போன்ற நூலை உமிழ்ந்து, சிலந்தி வலை போலக் கூடுகட்டத் துவங்கு​கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in