பயிற்சிக்கு வந்திருக்கும் இளைஞர்களுடன் செந்தில் குமரன் (முண்டாசு அணிந்திருப்பவர்).

பயிற்சிக்கு வந்திருக்கும் இளைஞர்களுடன் செந்தில் குமரன் (முண்டாசு அணிந்திருப்பவர்).

நம்மாழ்வார் வழியில் கோவையில் ‘செஞ்சோலை’ செந்தில்: இயற்கை விவசாயத்தை பரவலாக்குவதே முழு நேரப் பணி

Published on

கரூர் மாவட்டம் சுரு​மான்பட்டி கிராமத்​தில் உள்ளது ‘வானகம்’. இயற்கை வேளாண் அறிவிய​லா​ளர் நம்​மாழ்​வா​ரால் தொடங்​கப்​பட்ட இயற்கை வேளாண்மை பண்ணை இது. வறண்ட நிலத்​தை​யும் இயற்கை வேளாண்மை மூலம் வளம் கொழிக்​கும் பண்​ணை​யாக மாற்ற முடி​யும் என்​ப​தற்கு முன்​மா​திரி​யாக விளங்​கு​கிறது. இங்கு தன்​னார்​வல​ராகப் பணி​யாற்​றிய​வர் பொறி​யாளர் செந்​தில் குமரன்.

இன்று இயற்கை விவ​சா​யத்தை பரவலாக்​குவதையே தனது முழு நேரப் பணி​யாக மேற்கொண்டு வரு​கிறார். விவ​சா​யத்​தில் புதி​தாக ஈடுபட ஆர்​வ​முடைய இளைஞர்​களுக்கு விவ​சா​யம் குறித்து பயிற்சி அளிக்​கிறார்.

இதற்​காக கோயம்​புத்​தூர், சூலூரில் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ‘செஞ்சோலை’ என்ற பெயரில் இயற்கை வேளாண்மை பயிற்சிகளத்தை உருவாக்கியிருக்கிறார். இவரது பணிகளை நேரில் பார்க்கும் அனைவருமே, இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவதில் இவருக்கு இருக்கும் தீவிர ஆர்வத்தையும், இவரின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவையையும் கண்டு பிரமித்துப் போகிறார்கள்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘நில​மும் வளமும்’ வாசகர்​களுக்​காக தன்​னுடைய பணி​கள் பற்றி செந்​தில் குமரன் பகிர்ந்து கொண்டார். நான் பொறி​யியல் கல்​லூரி​யில் (B.E. - Instrumentation Engineering) படித்​துக் கொண்​டிருந்​த​ போது நம்​மாழ்​வார் பற்றி அறிந்து கொண்​டேன். அப்​போதே நேரம் கிடைக்​கும் போதெல்​லாம் வானகம் சென்று தன்​னார்​வல​ராகப் பணி​யாற்​றினேன்.

படிப்பு முடிந்து ஒரு நிறு​வனத்​தின் பணி​யில் சேர்ந்​தேன். எனினும் எனது விருப்​பமெல்​லாம் விவ​சா​யத்​திலேயே இருந்​தது. அதனால் வேலை​யி​லிருந்து விலகி விட்​டேன். நம்​மாழ்​வார் வழி​யில் இயற்கை வேளாண்​மைப் பற்றி பிரச்​சா​ரம் செய்​வதை​யும், விவ​சா​யிகளுக்கு பயிற்சி அளிப்​ப​தை​யும் முழு நேர​மும் செய்து வரு​கிறேன்.

இதற்​கிடையே ஆனைமலை புலிகள் காப்​பகம் பகு​தி​யில் 7 மலை கிராமங்​களைச் சேர்ந்த விவ​சா​யிகளோடு பணி​யாற்​று​வதற்​கான வாய்ப்பு கிடைத்​தது. அந்​தக் கிராமங்​களுக்கு சாலை வசதி​கள் கிடைத்​தவுடனேயே ரசாயன உரங்​களும், பூச்​சிக்​கொல்​லிகளும் அங்கு சென்​று​விட்​டன.

அங்​குள்ள மக்​கள் ரசாயனங்​களை அதீத​மாகப் பயன்​படுத்​தத் தொடங்​கினர். அமராவ​தி, ஆழி​யார் ஆறுகளின் நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் அந்​தக் கிராமங்​கள் உள்​ளன. விவ​சா​யிகள் பயன்​படுத்​திய ரசாயன உரங்​கள் இந்த ஆறுகளை நஞ்​சாக்கி விட்​டன. ரசாயன பூச்​சிக்​கொல்லி நஞ்​சுகள் அந்த ஆறுகளில் உள்ள மீன்​களின் உடலிலும் இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

இதனால் தனி​யார் தொண்டு நிறுவன உதவி​யுடன் அந்​தக் கிராமங்​களில் இயற்கை விவ​சா​யத்தை மேம்​படுத்த வனத்​துறை நடவடிக்கை மேற்​கொண்​டது. இந்​தப் பணி​களுக்​காக சுமார் ஒன்​றரை ஆண்​டு​கள் அந்​தக் கிராமங்​களில் தங்கி விவ​சா​யிகளு​டன் பணி​யாற்​றினேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in