வெளிநாட்டுல மட்டுமல்ல; தமிழ்நாட்டுலயும் விளையும்! - டிராகன் பழ சாகுபடியில் சாதனை

ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள டிராகன் சாகுபடி. (உள்படம்: கோபி)

ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள டிராகன் சாகுபடி. (உள்படம்: கோபி)

Updated on
2 min read

ஒரு காலத்​தில் டிராகன் பழத்தை நம்​மில் பலர் பார்த்​திருக்க மாட்​டார்​கள். கடைகளி​லும் அரி​தாகவே கிடைத்து வந்​தது. அடர் சிவப்பு நிறத்​தில் காணப்​படும் இந்​தப் பழம், சப்​பாத்​திக்​கள்ளி பழத்​தைப் போலவே காணப்​படும். இது, கற்​றாழை குடும்​பத்​தைச் சார்ந்த கொடிபோன்ற தாவரம்.

இந்​தப் பழத்​தின் செதில்​கள் பச்சை நிற​மாக இருக்​கும். இதன் நடு​வில், வெள்ளை அல்​லது சிவப்பு நிறத்​திலான இனிப்​புக் கூழ், சிறு கருப்பு விதைகளு​டன் இருக்​கும். சராசரி​யாக 700 முதல் 800 கிராம் எடை கொண்ட டிராகன் பழம், உலகில் வெப்ப மண்​டலப் பகு​தி​களில் பயி​ரிடப்​படு​கிறது.

டிராகன் பழம் பல்​வேறு நோய்​களை கட்​டுப்​படுத்​தும் தன்மை உடையது என்​ப​தால், கரோ​னா​வுக்​குப் பிறகு இந்த பழத்​துக்கு மக்​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு ஏற்​பட்டு உள்​ளது. பெரும்​பாலும் வெளி​நாடு​களில் மட்​டும் விளைந்த இந்த பழம், இப்​போது இந்​தி​யா​விலும், குறிப்​பாக தமிழ்​நாட்​டிலும் சாகுபடி செய்​யப்​படு​கிறது.

கிருஷ்ணகிரி மாவட்​டம், ஓசூரை அடுத்த உத்​தனப்​பள்​ளியைச் சேர்ந்த கோபி (38) என்​பவர் மானா​வாரி பயிர்​களை பயி​ரிட்டு வந்​தார். தண்​ணீர் தட்​டுப்​பாடு காரண​மாக அவரது நிலத்​தில் ஆழ்​குழாய் கிணறு அமைத்​தார். அதில் குறைந்த தண்​ணீரே கிடைத்​தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in