மிளகு சாகுபடியில் வழிகாட்டும் புதுக்கோட்டை பாலுசாமி

மிளகு சாகுபடியில் வழிகாட்டும் புதுக்கோட்டை பாலுசாமி
Updated on
2 min read

மலை சார்ந்த பகு​தி​களில் மட்​டுமே சாத்​தி​யம் என்​றிருந்த மிளகு சாகுபடி​யானது, வெப்​பம் மிகுந்த மாவட்​டங்​களில் ஒன்​றான புதுக்​கோட்டை பகு​தி​யிலும் சிறப்​பாக செய்​யப்​பட்டு வரு​கிறது. சமவெளி​யான இந்த பகு​தி​யில் ஏராள​மான விவ​சா​யிகள் மிளகு சாகுபடி செய்து பொருளா​தா​ரத்​தில் வலுப்​பெற்​றுள்​ளனர். சமவெளி பகு​தி​யில் மிளகு சாகுபடி செய்​வ​தில் பிற பகுதி விவ​சா​யிகளுக்கு புதுக்​கோட்டை மாவட்​டம் வழி​காட்டி வரு​கிறது.

இது குறித்து புதுக்​கோட்டை மாவட்​டம் வடகாடு வடக்​குப்​பட்​டி​யில் கடந்த 40 ஆண்​டு​களுக்​கும் மேலாக மிளகு சாகுபடி​யில் ஈடு​பட்டு வரும் முன்​னோடி விவ​சா​யி​யான க.பாலு​சாமி கூறிய​தாவது: கடந்த 40 ஆண்​டு​களுக்​கும் முன்பு காகிதம் தயாரிக்​கும் தொழில் தொடர்​பாக கேரளா​வுக்கு சென்​றிருந்​த​போது அங்​கிருந்து மிளகு கன்​றுகளை வாங்கி நடவு செய்​தேன்.

அதில் அபரிமித​மான விளைச்​சல் கிடைத்​தது. அதன் பிறகு, படிப்​படி​யாக சாகுபடி பரப்பை அதி​கரித்து சுமார் 8 ஏக்​கரில் இப்​போது மிளகு சாகுபடி செய்​கிறேன். பிற மரங்​களில் பற்றி வளரக்​கூடிய பண்பு கொண்ட மிளகு, செடி மற்​றும் கொடி என 2 வகை​களில் உள்​ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in