பிரேமலதா தோட்டத்து மிளகு, காபியில் அதிக மணம்... அதிக சுவை...!

ஏற்​காடு செம்​மநத்​தத்​தில்​ உள்​ள தோட்​டத்​தில்​, காபி, மிளகு பயிர்​களு​டன்​ இயற்​கை ​விவ​சாயி பிரேமலதா.

ஏற்​காடு செம்​மநத்​தத்​தில்​ உள்​ள தோட்​டத்​தில்​, காபி, மிளகு பயிர்​களு​டன்​ இயற்​கை ​விவ​சாயி பிரேமலதா.

Updated on
2 min read

போட்​டிகள் நிறைந்த இன்​றைய வணி​கமயச் சூழலில், இயற்கை விவ​சா​யம் என்​பது விவ​சா​யிகளுக்கு மிக​வும் சவாலான விசய​மாகி​விட்​டது. இயற்கை விவ​சா​யம் தொடங்​கும் கால​கட்​டத்​தில் மிக அதி​க​மான செல​வு, கூடு​தல் மனித உழைப்​பு, ஆள்பற்​றாக்​குறை, உழைப்​புக்​கேற்ற பலன் கிடைக்க இரண்​டு, மூன்று ஆண்​டு​களாவது பொறுமை​யுடன் காத்​திருக்க வேண்​டிய நிலை என இயற்கை விவ​சா​யத்​தில் பல சிக்​கல்​கள் உள்​ளன.

இந்த சிக்​கல்​கள் இல்​லாமல், ரசாயன உரம், பூச்​சிக் கொல்லி மருந்​துகளைப் பயன்​படுத்தி விவ​சா​யம் செய்​வது என்​பது எளி​தானது. இயற்கை விவ​சா​யத்​துடன் ஒப்​பிடும்​போது செலவு குறைவு, மகசூல் அதி​கரிப்​பு, உடனே சந்​தை​யில் விற்​கும் வாய்ப்​பு, வீரிய ஒட்டு ரக விதைகள் உள்​ளிட்ட இடு​பொருட்​கள் எளி​தாகக் கிடைப்​பது போன்ற காரணி​களை விவ​சா​யிகள் தங்​களுக்கு சாதக​மானவை என கருதுகிறார்​கள்.

இயற்கை விவசாயத்தைப் பொருத்தமட்டில், சூழலியலுக்கு கேடு விளைவிக்​காத விவ​சா​யம் என்​ப​தில் தீவிர ஈடு​பாடும், எத்​தனை கஷ்டங்​கள் வந்​தா​லும், தொடர்ந்து விடாப்​பிடி​யாக இயற்கை விவ​சா​யத்​தில் ஈடு​படு​பவர்​களால் மட்​டுமே, அடுத்த சில ஆண்​டு​களில் லாபகர​மான சாகுபடியை செய்ய இயலும்.

அத்​தகைய தீவிர​மான இயற்கை விவ​சா​யிகளில் ஒரு​வர்​தான் சேலம் மாவட்​டம் ஏற்​காடு செம்​மநத்​தம் கிராமத்​தில் 3.5 ஏக்​கர் தோட்​டத்​தில் இயற்கை விவ​சா​யத்​தில் ஈடு​பட்டு வரும் பிரேமலதா (57), பிஎஸ்சி (விலங்​கியல்) பட்​ட​தா​ரி​யான இவர், விவ​சாய பின்​புலமற்ற குடும்​பத்​தைச் சேர்ந்​தவர். இப்​போது முழுநேர இயற்கை விவ​சா​யி​யாக திகழ்கிறார். அவரது தோட்​டத்​தில் 342 மிளகு கொடிகளை பராமரித்து வரும் பிரேமலதா, இயற்கை விவ​சா​யத்​தில் 2.70 டன் மிளகு (பச்​சை) மகசூல் எடுத்து அசத்​தி​யுள்​ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in