

மழை இல்லாதது, வறட்சி, தீவிர வெப்பநிலை, புதிய பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலால் இன்று விவசாயம் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது. எந்தவொரு பயிர் சாகுபடியிலும் தொடக்கமே விதைதான். சிறந்த முறையில் மேலாண்மை செய்தாலும், ஆரம்பத்தில் விதை சரியாக முளைத்து நிலைபெறாவிட்டால், இறுதி மகசூல் பெருமளவில் குறைந்துவிடும்.
இந்த நிலையை மாற்றி, ஆரம்பக் கட்டத்திலேயே பயிரை வலுப்படுத்த ஹைதராபாத்தில் உள்ள இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு புதிய ‘ஸ்மார்ட் விதை நேர்த்தி தொழில்நுட்பத்தை’ உருவாக்கியுள்ளது.