ஏக்கருக்கு 5 குவிண்டால் கூடுதல் மகசூல்: உயிரி உரங்களால் செழிக்கும் மக்காச்சோளம்

ஏக்கருக்கு 5 குவிண்டால் கூடுதல் மகசூல்: உயிரி உரங்களால் செழிக்கும் மக்காச்சோளம்
Updated on
1 min read

காலநிலை மாற்​றத்​தால் ஏற்​படும் முறையற்ற மழையளவு, தமிழக விவ​சா​யிகளுக்​குப் பெரும் சவாலாக இருந்து வரு​கிறது. இதனால், குறைந்த பராமரிப்​புச் செல​வில் ஓரளவு நிலை​யான மகசூல் தரும் பயிர்​களை நோக்கி விவ​சா​யிகள் நகரத் தொடங்​கி​யுள்​ளனர். அந்த வகை​யில், கடந்த 20 ஆண்​டு​களாக கரிசல் மண் பகு​தி​களில் மக்​காச்​சோளச் சாகுபடி முதன்மை பெற்​றுள்​ளது.

மக்​காச்​சோளத்​தின் சிறப்​பு​களும் சவால்​களும்: இயந்​திரம் மூலம் எளி​தாக அறு​வடை செய்​யும் வசதி மற்​றும் அறு​வடைக்குக் கால​கெடு இல்​லாதது போன்ற காரணங்களால் விவ​சா​யிகள் மக்​காச்​சோளத்தை விரும்​பு​கின்​றனர். இருப்​பினும், சமீப​கால​மாக ‘படைப்​புழு’ தாக்​குதலால் பெரும் இழப்​பைச் சந்​திப்​ப​தால் விவ​சா​யிகள் கவலை​யடைந்​தனர்.

இதற்​குத் தீர்​வாக, தமிழ்​நாடு வேளாண்​மைப் பல்​கலைக்​கழகம் மற்​றும் அமெரிக்​கா​வின் பில் மெலின்டா கேட்ஸ் அறக்​கட்​டளை இணைந்து மேற்​கொண்ட ஆராய்ச்​சி​யின் பலனாக, உயிரி உரங்​கள் மூலம் புதிய நம்​பிக்​கையை அளித்துள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in