

கேழ்வரகு வயல். உள்படம்: கர்ணன்.
செயற்கை உரங்களும் வீரியமிக்க பூச்சிக்கொல்லிகளும் நிலத்தையும் மனித உடலையும் பாழாக்குவதை உணர்ந்த சிவகங்கை, பையூரைச் சேர்ந்த எல்.ஐ.சி ஊழியர் கர்ணன், தாமே களத்தில் இறங்கி இயற்கை விவசாயம் செய்யத் தீர்மானித்தார்.
இதற்காகச் சிவகங்கை ராகினிபட்டியில் 2.8 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பாரம்பரிய நெல் ரகங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டு வருகிறார். மழைக்காலத்தில் நெல் சாகுபடி செய்யும் இவர், கோடைக் காலத்தில் சிறுதானியங்களைச் சாகுபடி செய்கிறார். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிரிட்ட ’கோ-15’ ரகக் கேழ்வரகைத் தற்போது வெற்றிகரமாக அறுவடை செய்து வருகிறார்.
சாகுபடி அனுபவம்
“எப்பொழுதும் மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுனி, தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களைத்தான் சாகுபடி செய்வேன். இந்த ஆண்டு கோடையில் ‘கோ-15’ ரகக் கேழ்வரகைப் பயிரிட்டேன். 3 முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த ரகம், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது.