

முன்பெல்லாம் சாத்தூரில் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள், முதல் வரிசை பாத்திகளில் அகத்தி பயிரிடுவார்கள். அடுத்த வரிசை பாத்திகளில் மிளகாய் சாகுபடி செய்வார்கள். இவ்வாறு அகத்தியையும், மிளகாயையும் மாற்றி மாற்றி சாகுபடி செய்திருப்பார்கள்.
மிளகாய் செடியை அதிக வெயிலில் இருந்து காத்து, அதற்குத் தேவையான நிழலை அகத்தி தரும். அகத்தியின் வேர்ப் பகுதியில் நைட்ரஜன் சேமிக்கப்பட்டு, மிளகாய்க்குத் தேவையான நைட்ரஜன் சத்து இயற்கையாகவே கிடைத்து விடும்.