மாற்றி யோசித்த விவசாயி: ஆலைக்கு பாதி... வெல்லத்துக்கு மீதி...!

பணியாளர்களுடன் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆர்.அறிவழகன் (நிற்பவர்).

பணியாளர்களுடன் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆர்.அறிவழகன் (நிற்பவர்).

Updated on
2 min read

கரும்பு சாகுபடி செய்​யும் விவசாயிகள், தங்​களது விளைச்​சலைச் சர்க்​கரை ஆலைகளுக்கு அனுப்​பி​விட்​டு, அதற்​கான தொகை​யைப் பெறு​வதற்​குள் படும்பாடு கொஞ்ச நஞ்​சமல்ல. நிலு​வைத் தொகை, வெட்​டுக்​கூலி, போக்​கு​வரத்து வாடகை எனப் பல நெருக்​கடிகள்.

மறு​புறம் நெல் போன்ற பயிர்​களைச் சாகுபடி செய்ய நினைத்​தால், ஆள் பற்​றாக்​குறை விவ​சா​யத்​தையே கைவிட்​டு​விடலாமா என்ற எண்​ணத்தை ஏற்​படுத்​துகிறது.

இந்​தச் சவால்​களி​லிருந்து மீள வழிதேடிய தஞ்சை விவசாயி ஒரு​வர், ‘மதிப்​புக்​கூட்​டல்’ எனும் மந்​திரத்தை கையில் எடுத்​துள்​ளார். கரும்​பிலிருந்து வெல்​லம் தயாரிக்​கும் சிறு கூடத்தை நிறு​வி, இன்று மற்ற விவசாயிகளுக்கும் முன்​னு​தா​ரண​மாகத் திகழ்​கிறார்.

பாரம்​பரி​யத்​தில் ஒரு புதுமை

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வை​யாறு அருகே உள்ள ஓலத்​தேவ​ராயன்​பேட்​டையைச் சேர்ந்​தவர் ஆர்​.அறிவழகன் (48). பாரம்​பரிய விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த இவர், இன்​றைய தலை​முறைக்கு விவ​சா​யத்​தின் மீது நம்​பிக்​கையை ஏற்​படுத்​தும் வகை​யில் தனது செயல்​பாடு​களை அமைத்​துக்​கொண்​டார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in