அனுமன் வாலில் குங்குமம் வைப்பது ஏன்?

அனுமன் வாலில் குங்குமம் வைப்பது ஏன்?

Published on

சிவபெருமானின் அம்சமாக தோன்றியவர் அனுமன். இவர் ராமபிரானின் தூதராக விளங்கியவர். அனுமன் கோயிலுக்கு சென்று அனுமனைத் தரிசிக்கும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டும் என்று கூறப்படுவதுண்டு. சூரிய பகவானிடம் பாடம் கற்று, அனு மன் சூரியனை வலம் வந்தபோது மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன.

இதனால் அனுமனின் வாலுக்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகிவிட்டது. அனுமனை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது. ராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்தபோது, சீதை வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை வழிபடலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in