

புதுடெல்லி: உலக பாட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் ஷி யூ கி, இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டியுடன் மோதினார்.
இதில் அபாரமாக விளையாடிய ஆயுஷ் ஷெட்டி 21-14, 13-21, 21-19 என்ற கணக்கில் ஷி யூ கியூவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும், அயர்லாந்தின் சோபியா நோபிளும் மோதினர். இதில் பி.வி. சிந்து 21-7, 21-11 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 21-13 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பவுலா லோபஸ், லூசியா ரோட்ரிக்ஸ் ஜோடியைத் தோற்கடித்தது.