

புதுடெல்லி: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் மகளிருக்கான புட்சால் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று மாலத்தீவுகளுடன் மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணி 11-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை சிறந்த முறையில் தொடங்கியது.
இந்திய அணி சார்பில் குஷ்பு சரோஜ் 4 கோல்கள் (17, 22, 24, மற்றும் 26-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். ரித்திகா சிங் (6, 17-வது நிமிடங்கள்), சோனாலி (17, 37-வது நிமிடங்கள்), நிஷ்கா பிரகாஷ் (33, 34-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.
முன்னதாக மிதிலா ரமணி (4-வது நிமிடம்) போட்டியின் முதல் கோலை அடித்தார். இந்திய அணியின் அச்சோம் டெஜியோ 39-வது நிமிடத்தில் சுயகோல் அடித்தார். இதன் காரணமாகவே மாலத்தீவுகள் ஒரு கோலை பதிவு செய்ய முடிந்தது.
தாய்லாந்தில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் மகளிருக்கான புட்சால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாலத்தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீராங்கனை.