விஜய் ஹசாரே டிராபி இன்று தொடக்​கம்: கோலி, ரோஹித் சர்மா, கில் பங்​கேற்பு

விஜய் ஹசாரே டிராபி இன்று தொடக்​கம்: கோலி, ரோஹித் சர்மா, கில் பங்​கேற்பு
Updated on
2 min read

பெங்​களூரு: விஜய் ஹசாரே டிராபிக்​கான தேசிய ஒரு​நாள் போட்டி கிரிக்​கெட் தொடர் இன்று (டிசம்​பர் 24) நாட்​டின் பல்​வேறு நகரங்​களில் தொடங்​கு​கிறது.

உள்​ளூர் தொட​ரான இதில் இந்​திய அணிக்​காக விளை​யாடும் அனைத்து வீரர்​களும் குறைந்​த​பட்​சம் 2 போட்​டிகளில் கட்​டா​யம் பங்​கேற்க வேண்​டும் என பிசிசிஐ உத்​தர​விட்​டிருந்​தது. இதனால் இந்​திய அணி​யின் சீனியர் வீரர்​களும், இளம் வீரர்​களும் தங்​களது மாநிலங்​களை சேர்ந்த அணி​களுக்​காக களமிறங்க உள்​ளனர்.

இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 15 ஆண்​டு​களுக்​குப் பிறகு விளை​யாட உள்​ளனர். இது இந்​திய கிரிக்கெட்​டுக்​குள் உரு​வாகி வரும் அதி​கார மையத்​துக்கு அவர்கள், இனி விதி​விலக்​கல்ல என்​ப​தையே தெளிவுப்படுத்துகிறது.

இன்​றும் வரும் 26-ம் தேதி​யும் ஜெய்ப்​பூரில் சிக்​கிம் மற்​றும் உத்தராகண்ட் அணி​களுக்கு எதி​ராக நடை​பெறும் ஆட்​டத்​திலும் மும்பை அணிக்​காக ரோஹித் சர்மா களமிறங்​கு​கிறார். அதேவேளை​யில் மும்​பை​யில் இந்​திய அணி​யின் முன்​னாள் பேட்டிங் பயிற்​சி​யாளர் சஞ்​சய் பங்​கருடன் இணைந்து விராட் கோலி பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறார். டெல்லி அணிக்​காக களமிறங்​கும் அவர், இன்​னும் எந்​தெந்த போட்​டிகளில் விளை​யாட உள்​ளார் என்​பதை தெரிவிக்​க​வில்​லை.

எலைட் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி அணி தனது முதல் ஆட்​டத்​தில் இன்று ஆந்திராவுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்தை பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் நடத்த கர்​நாடக கிரிக்கெட் சங்​கம், அம்​மாநில அரசிடம் அனு​மதி கேட்​டிருந்​தது. ஆனால், பாது​காப்பு காரணங்​களை கருதி போட்​டிகளை நடத்த அரசு அனு​ம​திக்​க​வில்​லை.

இதையடுத்து இந்த போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் அமைந்​துள்ள மைதானத்​தில் நடைபெறுகிறது. இதற்​கிடையே விராட் கோலி நேற்று இரவு பெங்களூரு வந்​தடைந்​தார். இதனால் அவர், இன்​றைய ஆட்டத்தில் களமிறங்​கக்​கூடும் என ஊகங்​கள் எழுந்​துள்​ளன. வளர்ந்து வரும் இளம் வீரர்​களு​டன் இணைந்து சீனியர் வீரர்​கள் விளை​யாடு​வது அவர்​களின் திறனை மேலும் மெரு​கேற்​றிக் கொள்​ள​வும், மட்​டை​யுடன் சிறந்த தொடர்​பில் இருக்​க​வும் உதவக்கூடும்.

டி 20 உலகக் கோப்​பை​யில் இருந்து நீக்​கப்​பட்​டுள்ள ஷுப்​மன் கில், அதேவேளை​யில் சையது முஸ்​டாக் அலி டி 20 தொடரில் 500 ரன்​களுக்கு மேல் குவித்து அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்த இஷான் கிஷன், டெஸ்ட் போட்​டிகளில் மட்​டும் களமிறக்​கப்​பட்டு வரும் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் உள்ளிட்டோருக்​கும் விஜய்

ஹசாரே தொடர் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக அமைந்​துள்​ளது. ரிஷப் பந்த், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்​துக்கு பின்​னர் சர்வதேச ஒரு​நாள் போட்​டி, டி 20 போட்​டிகளில் இந்​திய அணிக்காக களமிறங்​க​வில்​லை. குறுகிய வடிவி​லான போட்டிகளில் அவர், மீண்​டும் அணிக்கு திரும்​பும் வகை​யில் விஜய் ஹசாரே தொடரில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

டி 20 உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய அணி​யில் சேர்க்கப்​ப​டாத ஷுப்​மன், பஞ்​சாப் அணிக்​காக களமிறங் உள்ளார். அவர், தனது மட்டை வீச்​சால் இந்​திய அணி தேர்​வுக் குழுவினருக்கு பதிலடி கொடுக்​கக்​கூடும். மேலும் அடுத்த மாதம் இந்​திய அணி, நியூஸிலாந்​துக்கு எதி​ராக 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரில் விளை​யாட உள்​ளது.

இந்த தொடருக்கு தயா​ராகும் வித​மாக விஜய் ஹசாரே டிராபி போட்​டிகளை பயன்​படுத்​திக் கொள்ள ஷுப்​மன் கில் முயற்சிக்கக் ​கூடும். தொடக்க நாளான இன்று நடை​பெறும் மற்ற ஆட்​டங்​களில் மகா​ராஷ்டி​ரா, பஞ்​சாப் அணி​யை​யும், ஜார்க்கண்ட், கர்​நாடக அணி​யை​யும், தமிழ்​நாடு, புதுச்சேரியையும் எதிர்​கொள்​கின்​றன. இந்த ஆட்​டங்​கள் காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது.

விஜய் ஹசாரே டிராபி இன்று தொடக்​கம்: கோலி, ரோஹித் சர்மா, கில் பங்​கேற்பு
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in