

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார்.
இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, துருவ் ஜூரெல் 51, ரியான் பராக் 7, டோனவன் பெரைரா 33, ஷிம்ரன் ஹெட்மயர் 11 ரன்கள் எடுத்தனர்.
அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 12 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 4 ரன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர் 229 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.