விராட் கோலி, ரோஹித்தை எதிர்கொள்வது புதிதல்ல: சொல்கிறார் தெம்பா பவுமா

விராட் கோலி, ரோஹித்தை எதிர்கொள்வது புதிதல்ல: சொல்கிறார் தெம்பா பவுமா

Published on

ராய்ப்பூர்: இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி ராய்ப்​பூரில் இன்று நடைபெறுகிறது.

இதையொட்டி தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் தெம்பா பவுமா கூறிய​தாவது: "ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் சேர்க்​கப்​பட்​டுள்​ளது இந்​திய அணிக்கு பலம் சேர்த்​துள்​ளது. தொடரின் தொடக்​கத்​தில் நாங்​கள் சொன்​னது போல், இவர்​கள் இரு​வரும் நிறைய அனுபவ​மும் திறமை​யும் கொண்​ட​வர்​கள், அது அணிக்கு பயனளிக்​கும். இது எங்​களுக்கு தெரி​யாத விஷ​யம் ஒன்றும் இல்​லை. 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்​பை​யில் ரோஹித் சர்​மாவுக்கு எதி​ராக தென் ஆப்​பிரிக்க அணி விளை​யாடி உள்​ளது.

அப்​போது நான் பள்ளி மாணவ​னாக இருந்​தேன். ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் இந்​திய அணி​யுடன்​ தான் இருக்​கின்​றனர். இதில் புதி​தாக ஒன்​றும் இல்​லை. அவர்​கள், உலகத்​தரம் வாய்ந்த வீரர்​கள். அவர்​களுக்கு எதி​ராக விளை​யாடு​வதும் புதிதல்ல, அதை கடந்​து​தான் வந்​திருக்​கிறோம். மோச​மான தருணங்​களும் இருந்​துள்​ளன. நல்ல தருணங்​களும் இருந்​துள்​ளன. இது​போன்ற விஷ​யங்​கள் தொடரை மிக​வும் உற்சாகப்படுத்துகின்றன.

முதல் ஒரு​நாள் போட்​டி​யில் 17 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தோம். பேட்​டிங் செயல்​திறனுக்கு இடையி​லான இடைவெளி பெரிய​தாக இல்​லை. அந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி சிறப்​பாக விளை​யாடியது. அந்த அணி​யின் இரண்டு முக்​கிய வீரர்கள் அற்​புத​மாக செயல்​பட்​டிருந்​தனர். இந்​தியா போன்ற வலுவான அணி​களுக்கு எதி​ராக 3 அல்​லது 4 டெஸ்​ட்​ போட்​டிகள்​ கொண்​ட தொடரில்​ விளை​யாட விரும்​பு​கிறாம்​. இவ்​​வாறு தெம்​​பா பவு​மா கூறி​னார்​.

விராட் கோலி, ரோஹித்தை எதிர்கொள்வது புதிதல்ல: சொல்கிறார் தெம்பா பவுமா
தென் ஆப்பிரிக்காவுடன் 2-வது போட்டியில் இன்று மோதல்: ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in